-
நாராயண கவசம் – Narayana Kavacham
sriman narayanan நாராயண கவசம்
ந்யாஸ:
அங்க3ன்யாஸ:
ஓஂ ஓஂ பாத3யோ: நம: ।
ஓஂ நஂ ஜானுனோ: நம: ।
ஓஂ மோஂ ஊர்வோ: நம: ।
ஓஂ நாஂ உத3ரே நம: ।
ஓஂ ராஂ ஹ்ருதி3 நம: ।
ஓஂ யஂ உரஸி நம: ।
ஓஂ ணாஂ முகே2 நம: ।
ஓஂ யஂ ஶிரஸி நம: ।கரன்யாஸ:
ஓஂ ஓம் த3க்ஷிணதர்ஜன்யாஂ நம: ।
ஓஂ நம் த3க்ஷிணமத்4யமாயாஂ நம: ।
ஓஂ மோம் த3க்ஷிணானாமிகாயாஂ நம: ।
ஓம் ப4ம் த3க்ஷிணகனிஷ்டி2காயாஂ நம: ।
ஓம் கஂ3 வாமகனிஷ்டி2காயாஂ நம: ।
ஓஂ வஂ வாமானிகாயாஂ நம: ।
ஓஂ தேஂ வாமமத்4யமாயாஂ நம: ।
ஓஂ வாஂ வாமதர்ஜன்யாஂ நம: ।
ஓஂ ஸும் த3க்ஷிணாங்கு3ஷ்டோ2ர்த்4வபர்வணி நம: ।
ஓம் தே3ம் த3க்ஷிணாங்கு3ஷ்டா2த:4 பர்வணி நம: ।
ஓஂ வாஂ வாமாங்கு3ஷ்டோ2ர்த்4வபர்வணி நம: ।
ஓஂ யஂ வாமாங்கு3ஷ்டா2த:4 பர்வணி நம: ।விஷ்ணுஷட3க்ஷரன்யாஸ:
ஓஂ ஓஂ ஹ்ருத3யே நம: ।
ஓஂ விஂ மூர்த்4னை நம: ।
ஓஂ ஷம் ப்4ருர்வோர்மத்4யே நம: ।
ஓஂ ணஂ ஶிகா2யாஂ நம: ।
ஓஂ வேஂ நேத்ரயோ: நம: ।
ஓஂ நஂ ஸர்வஸன்தி4ஷு நம: ।
ஓஂ ம: ப்ராச்யாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: ஆக்3னேய்யாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: த3க்ஷிணஸ்யாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: நைருத்யே அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: ப்ரதீச்யாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: வாயவ்யே அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: உதீ3ச்யாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: ஐஶான்யாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: ஊர்த்4வாயாஂ அஸ்த்ராய ப2ட் ।
ஓஂ ம: அத4ராயாஂ அஸ்த்ராய ப2ட் ।ஶ்ரீ ஹரி:
அத2 ஶ்ரீனாராயணகவச
॥ராஜோவாச॥
யயா கு3ப்த: ஸஹஸ்த்ராக்ஷ: ஸவாஹான் ரிபுஸைனிகான்।
க்ரீட3ன்னிவ வினிர்ஜித்ய த்ரிலோக்யா பு3பு4ஜே ஶ்ரியம்॥1॥ப4க3வம்ஸ்தன்மமாக்2யாஹி வர்ம நாராயணாத்மகம்।
யதா2ஸ்ஸ்ததாயின: ஶத்ரூன் யேன கு3ப்தோஸ்ஜயன்ம்ருதே4॥2॥॥ஶ்ரீஶுக உவாச॥
வ்ருத: புரோஹிதோஸ்த்வாஷ்ட்ரோ மஹேன்த்3ராயானுப்ருச்ச2தே।
நாராயணாக்2யஂ வர்மாஹ ததி3ஹைகமனா: ஶ்ருணு॥3॥விஶ்வரூப உவாசதௌ4தாங்க்4ரிபாணிராசம்ய ஸபவித்ர உத3ங் முக:2।
க்ருதஸ்வாங்க3கரன்யாஸோ மன்த்ராப்4யாஂ வாக்3யத: ஶுசி:॥4॥நாராயணமயஂ வர்ம ஸம்னஹ்யேத்3 ப4ய ஆக3தே।
பாத3யோர்ஜானுனோரூர்வோரூத3ரே ஹ்ருத்3யதோ2ரஸி॥5॥முகே2 ஶிரஸ்யானுபூர்வ்யாதோ3ங்காராதீ3னி வின்யஸேத்।
ஓஂ நமோ நாராயணாயேதி விபர்யயமதா2பி வா॥6॥கரன்யாஸஂ தத: குர்யாத்3 த்3வாத3ஶாக்ஷரவித்3யயா।
ப்ரணவாதி3யகாரன்தமங்கு3ல்யங்கு3ஷ்ட2பர்வஸு॥7॥ந்யஸேத்3 ஹ்ருத3ய ஓங்காரஂ விகாரமனு மூர்த4னி।
ஷகாரஂ து ப்4ருவோர்மத்4யே ணகாரஂ ஶிக2யா தி3ஶேத்॥8॥வேகாரஂ நேத்ரயோர்யுஞ்ஜ்யான்னகாரஂ ஸர்வஸன்தி4ஷு।
மகாரமஸ்த்ரமுத்3தி3ஶ்ய மன்த்ரமூர்திர்ப4வேத்3 பு3த:4॥9॥ஸவிஸர்க3ம் ப2ட3ன்தஂ தத் ஸர்வதி3க்ஷு வினிர்தி3ஶேத்।
ஓஂ விஷ்ணவே நம இதி ॥1௦॥ஆத்மானஂ பரமம் த்4யாயேத3 த்4யேயஂ ஷட்ஶக்திபி4ர்யுதம்।
வித்3யாதேஜஸ்தபோமூர்திமிமஂ மன்த்ரமுதா3ஹரேத ॥11॥ஓஂ ஹரிர்வித3த்4யான்மம ஸர்வரக்ஷாஂ ந்யஸ்தாங்க்4ரிபத்3ம: பதகே3ன்த்3ரப்ருஷ்டே2।
த3ராரிசர்மாஸிக3தே3ஷுசாபாஶான் த3தா4னோஸ்ஷ்டகு3ணோஸ்ஷ்டபா3ஹு: ॥12॥ஜலேஷு மாஂ ரக்ஷது மத்ஸ்யமூர்திர்யாதோ3க3ணேப்4யோ வரூணஸ்ய பாஶாத்।
ஸ்த2லேஷு மாயாவடுவாமனோஸ்வ்யாத் த்ரிவிக்ரம: கே2வது விஶ்வரூப: ॥13॥து3ர்கே3ஷ்வடவ்யாஜிமுகா2தி3ஷு ப்ரபு4: பாயான்ன்ருஸிம்ஹோஸுரயுத2பாரி:।
விமுஞ்சதோ யஸ்ய மஹாட்டஹாஸம் தி3ஶோ வினேது3ர்ன்யபதம்ஶ்ச க3ர்பா4: ॥14॥ரக்ஷத்வஸௌ மாத்4வனி யஜ்ஞகல்ப: ஸ்வத3ம்ஷ்ட்ரயோன்னீதத4ரோ வராஹ:।
ராமோத்3ரிகூடேஷ்வத2 விப்ரவாஸே ஸலக்ஷ்மணோஸ்வ்யாத்3 ப4ரதாக்3ரஜோஸ்ஸ்மான் ॥15॥மாமுக்3ரத4ர்மாத3கி2லாத் ப்ரமாதா3ன்னாராயண: பாது நரஶ்ச ஹாஸாத்।
த3த்தஸ்த்வயோகா3த3த2 யோக3னாத:2 பாயாத்3 கு3ணேஶ: கபில: கர்மப3ன்தா4த் ॥16॥ஸனத்குமாரோ வது காமதே3வாத்3த4யஶீர்ஷா மாஂ பதி2 தே3வஹேலனாத்।
தே3வர்ஷிவர்ய: புரூஷார்சனான்தராத் கூர்மோ ஹரிர்மாஂ நிரயாத3ஶேஷாத் ॥17॥த4ன்வன்தரிர்ப4க3வான் பாத்வபத்2யாத்3 த்3வன்த்3வாத்3 ப4யாத்3ருஷபோ4 நிர்ஜிதாத்மா।
யஜ்ஞஶ்ச லோகாத3வதாஜ்ஜனான்தாத்3 ப3லோ க3ணாத் க்ரோத4வஶாத3ஹீன்த்3ர: ॥18॥த்3வைபாயனோ ப4க3வானப்ரபோ3தா4த்3 பு3த்3த4ஸ்து பாக2ண்ட3க3ணாத் ப்ரமாதா3த்।
கல்கி: கலே காலமலாத் ப்ரபாது த4ர்மாவனாயோரூக்ருதாவதார: ॥19॥மாஂ கேஶவோ க3த3யா ப்ராதரவ்யாத்3 கோ3வின்த3 ஆஸங்க3வமாத்தவேணு:।
நாராயண ப்ராஹ்ண உதா3த்தஶக்திர்மத்4யன்தி3னே விஷ்ணுரரீன்த்3ரபாணி: ॥2௦॥தே3வோஸ்பராஹ்ணே மது4ஹோக்3ரத4ன்வா ஸாயஂ த்ரிதா4மாவது மாத4வோ மாம்।
தோ3ஷே ஹ்ருஷீகேஶ உதார்த4ராத்ரே நிஶீத2 ஏகோஸ்வது பத்3மனாப:4 ॥21॥ஶ்ரீவத்ஸதா4மாபரராத்ர ஈஶ: ப்ரத்யூஷ ஈஶோஸித4ரோ ஜனார்த3ன:।
தா3மோத3ரோவ்யாத3னுஸன்த்4யஂ ப்ரபா4தே விஶ்வேஶ்வரோ ப4க3வான் காலமூர்தி: ॥22॥சக்ரஂ யுகா3ன்தானலதிக்3மனேமி ப்4ரமத் ஸமன்தாத்3 ப4க3வத்ப்ரயுக்தம்।
த3ன்த3க்3தி4 த3ன்த3க்3த்4யரிஸைன்யமாஸு கக்ஷஂ யதா2 வாதஸகோ2 ஹுதாஶ: ॥23॥க3தே3ஶனிஸ்பர்ஶனவிஸ்பு2லிங்கே3 நிஷ்பிண்டி4 நிஷ்பிண்ட்4யஜிதப்ரியாஸி।
கூஷ்மாண்ட3வைனாயகயக்ஷரக்ஷோபூ4தக்3ரஹாம்ஶ்சூர்ணய சூர்ணயாரீன் ॥24॥த்வஂ யாதுதா4னப்ரமத2ப்ரேதமாத்ருபிஶாசவிப்ரக்3ரஹகோ4ரத்3ருஷ்டீன்।
த3ரேன்த்3ர வித்3ராவய க்ருஷ்ணபூரிதோ பீ4மஸ்வனோரேர்ஹ்ருத3யானி கம்பயன் ॥25॥த்வஂ திக்3மதா4ராஸிவராரிஸைன்யமீஶப்ரயுக்தோ மம சி2ன்தி4 சி2ன்தி4।
சர்மஞ்ச2தசன்த்3ர சா2த3ய த்3விஷாமகோ4னாஂ ஹர பாபசக்ஷுஷாம் ॥26॥யன்னோ ப4யம் க்3ரஹேப்4யோ பூ4த் கேதுப்4யோ ந்ருப்4ய ஏவ ச।
ஸரீஸ்ருபேப்4யோ த3ம்ஷ்ட்ரிப்4யோ பூ4தேப்4யோம்ஹோப்4ய ஏவ வா ॥27॥ஸர்வாண்யேதானி ப4க3ன்னாமரூபாஸ்த்ரகீர்தனாத்।
ப்ரயான்து ஸங்க்ஷயஂ ஸத்3யோ யே ந: ஶ்ரேய: ப்ரதீபகா: ॥28॥க3ரூட்3க்ஷோ ப4க3வான் ஸ்தோத்ரஸ்தோப4ஶ்ச2ன்தோ3மய: ப்ரபு4:।
ரக்ஷத்வஶேஷக்ருச்ச்2ரேப்4யோ விஷ்வக்ஸேன: ஸ்வனாமபி4: ॥29॥ஸர்வாபத்3ப்4யோ ஹரேர்னாமரூபயானாயுதா4னி ந:।
பு3த்3தி4ன்த்3ரியமன: ப்ராணான் பான்து பார்ஷத3பூ4ஷணா: ॥3௦॥யதா2 ஹி ப4க3வானேவ வஸ்துத: ஸத்3ஸச்ச யத்।
ஸத்யனானேன ந: ஸர்வே யான்து நாஶமுபாத்3ரவா: ॥31॥யதை2காத்ம்யானுபா4வானாஂ விகல்பரஹித: ஸ்வயம்।
பூ4ஷணாயுத்3த4லிங்கா3க்2யா த4த்தே ஶக்தீ: ஸ்வமாயயா ॥32॥தேனைவ ஸத்யமானேன ஸர்வஜ்ஞோ ப4க3வான் ஹரி:।
பாது ஸர்வை: ஸ்வரூபைர்ன: ஸதா3 ஸர்வத்ர ஸர்வக:3 ॥33விதி3க்ஷு தி3க்ஷூர்த்4வமத:4 ஸமன்தாத3ன்தர்ப3ஹிர்ப4க3வான் நாரஸிம்ஹ:।
ப்ரஹாபயம்ல்லோகப4யஂ ஸ்வனேன க்3ரஸ்தஸமஸ்ததேஜா: ॥34॥மக4வன்னித3மாக்2யாதஂ வர்ம நாரயணாத்மகம்।
விஜேஷ்யஸ்யஞ்ஜஸா யேன த3ம்ஶிதோஸுரயூத2பான் ॥35॥ஏதத்3 தா4ரயமாணஸ்து யஂ யஂ பஶ்யதி சக்ஷுஷா।
பதா3 வா ஸம்ஸ்ப்ருஶேத் ஸத்3ய: ஸாத்4வஸாத் ஸ விமுச்யதே ॥36॥ந குதஶ்சித ப4யஂ தஸ்ய வித்3யாம் தா4ரயதோ ப4வேத்।
ராஜத3ஸ்யுக்3ரஹாதி3ப்4யோ வ்யாக்4ராதி3ப்4யஶ்ச கர்ஹிசித் ॥37॥இமாஂ வித்3யாஂ புரா கஶ்சித் கௌஶிகோ தா4ரயன் த்3விஜ:।
யோக3தா4ரணயா ஸ்வாங்கஂ3 ஜஹௌ ஸ மரூத4ன்வனி ॥38॥தஸ்யோபரி விமானேன க3ன்த4ர்வபதிரேகதா3।
யயௌ சித்ரரத:2 ஸ்த்ரீர்பி4வ்ருதோ யத்ர த்3விஜக்ஷய: ॥39॥க3க3னான்ன்யபதத் ஸத்3ய: ஸவிமானோ ஹ்யவாக் ஶிரா:।
ஸ வாலகி2ல்யவசனாத3ஸ்தீ2ன்யாதா3ய விஸ்மித:।
ப்ராஸ்ய ப்ராசீஸரஸ்வத்யாஂ ஸ்னாத்வா தா4ம ஸ்வமன்வகா3த் ॥4௦॥॥ஶ்ரீஶுக உவாச॥
ய இதஂ3 ஶ்ருணுயாத் காலே யோ தா4ரயதி சாத்3ருத:।
தஂ நமஸ்யன்தி பூ4தானி முச்யதே ஸர்வதோ ப4யாத் ॥41॥ஏதாஂ வித்3யாமதி4க3தோ விஶ்வரூபாச்ச2தக்ரது:।
த்ரைலோக்யலக்ஷ்மீம் பு3பு4ஜே வினிர்ஜித்யம்ருதே4ஸுரான் ॥42॥॥இதி ஶ்ரீனாராயணகவசஂ ஸம்பூர்ணம்॥
( ஶ்ரீமத்3பா4க3வத ஸ்கன்த4 6,அ। 8 ) -
இராமானுச நூற்றந்தாதி – Ramanujar Noottranthathi
இராமானுச நூற்றந்தாதி இராமானுச நூற்றந்தாதி தனியன்கள் வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், – என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்.நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது, ஓங்கும்அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமா னுச! இதென் விண்ணப்பமே.ஆழ்வார் திருவடிகளே சரணம்
1 இராமானுச நூற்றந்தாதி பூமன்னுமாது பொருந்தியமார்பன் * புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் * பல்கலையோர்
தாம்மன்னவந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ * நெஞ்சேசொல்லுவோம் அவன் நாமங்களே. (2)1 3777 கள்ளார்பொழில்தென்னரங்கன் * கமலப்பதங்கள் நெஞ்சிற்
கொள்ளா மனிசரைநீங்கி * குறையல்பிரானடிக்கீழ்
விள்ளாதவன்பனிராமானுசன்மிக்கசீலமல்லால்
உள்ளாதுஎன்நெஞ்சு * ஒன்றறியேன்எனக்குற்றபேரியல்வே. (2)2 3778 பேரியல்நெஞ்சே! அடிபணிந்தேனுன்னை * பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம்புலர்த்தி * பொருவருஞ்சீர்
ஆரியன்செம்மை இராமானுசமுனிக்கன்புசெய்யும்
சீரியபேறுடையார் * அடிக்கீழ்என்னைச்சேர்த்ததற்கே.3 3779 என்னைப்புவியில் ஒருபொருளாக்கி * மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து * ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்தவிராமனுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்கவைத்தான் * எனக்கேதுஞ்சிதைவில்லையே.4 3780 எனக்குற்றசெல்வம் மிராமானுசனென்று * இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் * அவன்மன்னியசீர்
தனக்குற்றவன்பரவன் திருநாமங்கள்சாற்றுமென்பா
இனக்குற்றம்காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே.5 3781 இயலும்பொருளும் இசையத்தொடுத்து * ஈன்கவிகள்அன்பால்
மயல்கொண்டுவாழ்த்துமிராமானுசனை * மதியின்மையால்
பயிலும்கவிகளில்பத்தியில்லாதவென்பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் * அவன்றன்பெருங்கீர்த்திமொழிந்திடவே.6 3782 மொழியைக்கடக்கும் பெரும்புகழான் * வஞ்சமுக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான்சரண்கூடியபின் *
பழியைக்கடத்துமிராமானுசன்புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல் * எனக்குஇனியாதும்வருத்தமன்றே. (2)7 3783 வருத்தும்புறவிருள்மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின்பொருளையும் செந்தமிழ்தன்னையும்கூட்டி * ஒன்றத்
திரித்தன்றெரித்ததிருவிளக்கைத் தன்திருவுள்ளத்தே
இருத்தும்பரமன் * இராமானுசன் எம்மிறையவனே.8 3784 இறைவனைக்காணும் இதயத்திருள்கெட * ஞானமென்னும்
நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடிதாள்கள் * நெஞ்சத்து
உறையவைத்தாளுமிராமானுசன்புகழோதும்நல்லோர்
மறையினைக்காத்து * இந்தமண்ணகத்தே மன்னவைப்பவரே.9 3785 மன்னியபேரிருள்மாண்டபின் * கோவலுள்மாமலராள்
தன்னொடுமாயனைக்கண்டமைகாட்டும் * தமிழ்த்தலைவன்
பொன்னடிபோற்றுமிராமானுசற்கு அன்புபூண்டவர்தாள்
சென்னியில்சூடும் * திருவுடையார் என்றும்சீரியரே.10 3786 சீரியநான்மறைச் செம்பொருள் * செந்தமிழாலளித்த
பாரியலும்புகழ்ப்பாண்பெருமாள் * சரணாம்பதுமத்
தாரியல்சென்னியிராமானுசன் தன்னைச்சார்ந்தவர்தம்
காரியவண்மை * என்னாற்சொல்லொணாது இக்கடலிடத்தே.11 3787 இடங்கொண்டகீர்த்திமழிசைக்கிறைவன் * இணையடிப்போது
அடங்குமிதயத்திராமானுசன் * அம்பொற்பாதமென்றும்
கடங்கொண்டிறைஞ்சுந்திருமுனிவர்க்கன்றிக்காதல்செய்யாத்
திடங்கொண்டஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே.12 3788 செய்யும்பசுந்துளவத்தொழில்மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ்மாலையும் * பேராதசீரரங்கத்து
ஐயன்கழற்கணியும்பரன்தாளன்றி யாதரியா
மெய்யன் * இராமானுசன்சரணேகதிவேறெனக்கே.13 3789 கதிக்குப்பதறி * வெங்கானமும்கல்லும்கடலுமெல்லாம்
கொதிக்கத்தவஞ்செய்யுங்கொள்கையற்றேன் * கொல்லிகாவலன்சொல்
பதிக்கும்கலைக்கவிபாடும்பெரியவர்பாதங்களே
துதிக்கும்பரமன் * இராமானுசன்என்னைச் சோர்விலனே.14 3790 சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லைமாலை யொன்றும்
பாராது அவனைப்பல்லாண்டென்றுகாப்பிடும் * பான்மையன் தாள்
பேராதவுள்ளத்திராமானுசன்றன்பிறங்கியசீர்
சாராமனிசரைச்சேரேன் * எனக்குஎன்னதாழ்வினியே?15 3791 தாழ்வொன்றில்லாமறைதாழ்ந்து * தலமுழுதும்கலியே
ஆள்கின்றநாள்வந்து அளித்தவன்காண்மின் * அரங்கர்மௌலி
சூழ்கின்றமாலையைச்சூடிக்கொடுத்தவள்தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல் * இராமானுசனென்னும்மாமுனியே. (2)16 3792 முனியார்துயரங்கள்முந்திலும் * இன்பங்கள்மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானைக் * கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்தநீலன்தனக்கு உலகில்
இனியானை * எங்களிராமானுசனைவந்தெய்தினரே.17 3793 எய்தற்கரியமறைகளை * ஆயிரமின்தமிழாற்
செய்தற்குஉலகில்வரும் சடகோபனைச் * சிந்தையுள்ளே
பெய்தற்கிசையும்பெரியவர்சீரை உயிர்களெல்லாம்
உய்வதற்குஉதவும் * இராமானுசன்எம்உறுதுணையே.18 3794 உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும் * உயர்குருவும்
வெறிதருபூமகள்நாதனும் * மாறன்விளங்கியசீர்
நெறிதருஞ்செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்
அறிதரநின்ற * இராமானுசன் எனக்காரமுதே.19 3795 ஆரப்பொழில்தென்குருகைப்பிரான் * அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
சீரைப்பயின்றுய்யுஞ்சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால்
வாரிப்பருகும் * இராமானுசன்என்தன்மாநிதியே.20 3796 நிதியைப்பொழியும் முகிலென்று * நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன்யமுனைத்துறைவனிணையடியாம்
கதிபெற்றுடைய * இராமானுசன்என்னைக்காத்தனனே.21 3797 கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும்வெப்பும்முதுகிட்டு * மூவுலகும்
பூத்தவனே! என்றுபோற்றிடவாணன்பிழைபொறுத்த
தீர்த்தனையேத்தும் * இராமானுசன்என்தன்சேமவைப்பே.22 3798 வைப்பாயவான்பொருளென்று * நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்
ஒப்பாரிலாத உறுவினையேன்வஞ்சநெஞ்சில்வைத்து
முப்போதும்வாழ்த்துவன் * என்னாம்இதுஅவன்மொய் புகழ்க்கே?23 3799 மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம் * இன்றுகண்டுயர்ந்தேன்
பொய்த்தவம்போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞானத்து * இராமானுசனெனும்கார்தன்னையே.24 3800 காரேய்கருணையிராமானுச! * இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னருளின்தன்மை * அல்லலுக்கு
நேரேயுறைவிடம்நான்வந்துநீயென்னைஉய்த்தபின் உன்
சீரேயுயிர்க்குயிராய் * அடியேற்குஇன்றுதித்திக்குமே.25 3801 தீக்குற்றகீர்த்தி யிராமானுசனை * என்செய்வினையாம்
மெய்க்குற்றம்நீக்கி விளங்கியமேகத்தை * மேவுநல்லோர்
எக்குற்றவாளரெதுபிறப்பேதியல்வாகநின்றோர்
அக்குற்றமப்பிறப்பு * அவ்வியல்வேநம்மையாட் கொள்ளுமே.26 3802 கொள்ளக்குறைவற்றிலங்கி * கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல்தனத்தினால் வல்வினையேன்மனம்நீபுகுந்தாய் *
வெள்ளைச்சுடர்விடுமுன்பெருமேன்மைக்கிழுக்கிதென்று
தள்ளூற்றிரங்கும் * இராமானுச! என்தனிநெஞ்சமே.27 3803 நெஞ்சிற்கறைகொண்டகஞ்சனைக் காய்ந்தநிமலன் * நங்கள்
பஞ்சித்திருவடிப் பின்னைதன்காதலன் * பாதம்நண்ணா
வஞ்சர்க்கரியவிராமானுசன்புகழன்றி என்வாய்
கொஞ்சிப்பரவகில்லாது * என்னவாழ்வின்றுகூடியதே!28 3804 கூட்டும்விதியென்றுகூடுங்கொலோ? * தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னைத் * தன்பத்தியென்னும்
வீட்டின்கண்வைத்தஇராமானுசன்புகழ்மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள்தன்னை * என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே.29 3805 இன்பந்தருபெருவீடுவந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பந்தருநிரயம்பலசூழிலென்? * தொல்லுலகில்
மன்பல்லுயிர்கட்கிறையவன்மாயனெனமொழிந்த
அன்பன்அனகன் * இராமானுசன்என்னையாண்டனனே.30 3806 ஆண்டுகள்நாள்திங்களாய் * நிகழ்காலமெல்லாம் மனமே!
ஈண்டுபல்யோனிகள்தோறுழல்வோம் * இன்றோ ரெண்ணின்றியே
காண்தகுதோளண்ணல்தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப்
பூண்டவன்பாளன் * இராமானுசனைப்பொருந்தினமே. (2)31 3807 பொருந்தியதேசும் பொறையும்திறலும்புகழும் * நல்ல
திருந்தியஞானமும் செல்வமும்சேரும் * செறுகலியால்
வருந்தியஞாலத்தைவண்மையினால் வந்தெடுத்தளித்த
அருந்தவன் * எங்களிராமானுசனையடைபவர்க்கே.32 3808 அடையார்கமலத்து அலர்மகள்கேள்வன் * கையாழியென்னும்
படையோடுநாந்தகமும் படர்தண்டும் *ஒண்சார்ங்கவில்லும்
புடையார்புரிசங்கமும்இந்தப்பூதலங்காப்பதற்கென்று *
இடையே இராமானுசமுனியாயினஇந்நிலத்தே.33 3809 நிலத்தைச்செறுத்துண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய
பலத்தைச்செறுத்தும் பிறங்கியதில்லை * என்பெய்வினை தென்
புலத்திற்பொறித்தவப்புத்தகச்சும்மைபொறுக்கியபின்
நலத்தைப்பொறுத்தது * இராமானுசன்தன்நயப்புகழே.34 3810 நயவேன்ஒருதெய்வம் நானிலத்தே * சிலமானிட்த்தைப்
புயலேயெனக் கவிபோற்றிசெய்யேன் * பொன்னரங்க மென்னில்
மயலேபெருகுமிராமானுசன்மன்னுமாமலர்த்தாள் *
அயரேன் * அருவினையென்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?35 3811 அடல்கொண்டநேமிய னாருயிர்நாதன் * அன்றுஆரணச் சொல்
கடல்கொண்டவொண்பொருள்கண்டளிப்ப * பின்னும்காசினியோர்
இடரின்கண்வீழ்ந்திடத்தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர்பின்
படருங்குணன் * எம்மிராமானுசன்தன்படியிதுவே.36 3812 படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்தி வெள்ளம் *
குடிகொண்டகோயி லிராமானுசன்குண்ங்கூறும் * அன்பர்
கடிகொண்டமாமலர்த்தாள்கலந்துள்ளங்கனியும்நல்லோர்
அடிகண்டுகொண்டுகந்து * என்னையுமாளவர்க்காக்கினரே.37 3813 ஆக்கியடிமைநிலைப்பித்தனை என்னையின்று * அவமே
போக்கிப் புறத்திட்ட்தென்பொருளாமுன்பு? * புண்ணியர் தம்
வாக்கிற்பிரியாஇராமானுச! நின்னருளின்வண்ணம்
நோக்கில்தெரிவரிதால் * உரையாய்இந்தநுண்பொருளே.38 3814 பொருளும்புதல்வரும்பூமியும் * பூங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும் நமக்குநெஞ்சே! * மற்றுளார்தரமோ
இருள்கொண்டவெந்துயர்மாற்றித்தன்னீறில்பெரும்புகழே
தெருளும்தெருள்தந்து * இராமானுசன்செய்யும் சேமங்களே.39 3815 சேமநல்வீடும்பொருளும்தருமமும் * சீரியநற்
காமமுமென்றிவை நான்கென்பர் *நான்கினும் கண்ணனுக்கே
ஆமதுகாமம்அறம்பொருள்வீடிதற்கென்றுரைத்தான்
வாமனன்சீலன் * இராமானுசன்இந்தமண்மிசையே.40 3816 மண்மிசை யோனிகள்தோறும்பிறந்து * எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்
அண்ணலிராமானுசன்வந்துதோன்றியஅப்பொழுதே
நண்ணருஞானம்தலைக்கொண்டு * நாரணற்காயினரே.41 3817 ஆயிழையார்கொங்கைதங்கும் *அக்காதலளற்றழுந்தி
மாயுமெனாவியை வந்தெடுத்தானின்று *மாமலராள்
நாயகனெல்லாவுயிர்கட்கும்நாத னரங்கனென்னும்
தூயவன் * தீதிலிராமானுசன்தொல்லருள்சுரந்தே.42 3818 சுரக்குந்திருவுமுணர்வும் * சொலப்புகில்வாயமுதம்
பரக்கும் இருவினைபற்றறவோடும் * படியிலுள்ளீர்!
உரைக்கின்றனன்உமக்கியான் அறஞ்சீறுமுறுகலியைத்
துரக்கும்பெருமை * இராமானுசனென்று சொல்லுமினே.43 3819 சொல்லார்தமிழொருமூன்றும் * சுருதிகள்நான்கும்எல்லை
யில்லாவறநெறி யாவும்தெரிந்தவன் * எண்ணருஞ்சீர்
நல்லார்பரவுமிராமானுசன் திருநாமம்நம்பிக்
கல்லார்அகலிடத்தோர் * எதுபேறென்றுகாமிப்பரே.44 3820 பேறொன்றுமற்றில்லை நின்சரணன்றி * அப்பேறளித்தற்கு
ஆறொன்றுமில்லைமற்றைச்சரணன்றி * என்றுஇப்பொருளைத்
தேறுமவர்க்குமெனக்குமுனைத்தந்தசெம்மை சொல்லால்
கூறும்பரமன்று * இராமானுச! மெய்ம்மைகூறிடிலே.45 3821 கூறுஞ்சமயங்களாறும்குலைய * குவலயத்தே
மாறன்பணித்த மறையுணர்ந்தோனை * மதியிலியேன்
தேறும்படியென்மனம்புகுந்தானைத் திசையனைத்தும்
ஏறும்குணனை * இராமானுசனைஇறைஞ்சினமே.46 3822 இறைஞ்சப்படும்பரன் ஈசனரங்கனென்று * இவ்வுலகத்து
அறஞ்செப்பு மண்ணலிராமானுசன் * என்னருவினையின்
திறஞ்செற்றிரவும்பகலும்விடாது என்தன்சிந்தையுள்ளே
நிறைந்தொப்பறவிருந்தான் * எனக்காரும்நிகரில்லையே.47 3823 நிகறின்றிநின்ற என்நீசதைக்கு * நின்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை அருட்குமஃதேபுகல் * புன்மையிலோர்
பகரும்பெருமையிராமானுச! இனிநாம்பழுதே
அகலும்பொருளென்? * பயனிருவோமுக்குமான பின்னே.48 3824 ஆனதுசெம்மையறநெறி * பொய்ம்மையறுசமயம்
போனதுபொன்றி இறந்த்துவெங்கலி * பூங்கமலத்
தேனதிபாய்வயல்தென்னரங்கன்கழல்சென்னிவைத்துத்
தானதில்மன்னும் * இராமானுசன்இத்தலத்துதித்தே.49 3825 உதிப்பனவுத்தமர்சிந்தையுள் * ஒன்னலர்நெஞ்சமஞ்சிக்
கொதித்திடமாறிநடப்பன * கொள்ளைவன்குற்றமெல்லாம்
பதித்தஎன்புன்கவிப்பாவினம்பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலைநாதன் * இராமானுசன்தனிணையடியே.50 3826 அடியைத்தொடர்ந்தெழுமைவர்கட்காய் * அன்று பாரதப்போர்
முடியப்பரிநெடுதேர்விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதமிராமானுசன் என்னையாளவந்து இப்
படியிற்பிறந்தது * மற்றில்லைகாரணம்பார்த்திடிலே.51 3827 பார்த்தான்அறுசமயங்கள்பதைப்ப * இப்பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து *
தீர்த்தானிருவினைதீர்த்து அரங்கன்செய்யதாளிணையோடு
ஆர்த்தான் * இவைஎம்மிராமானுசன்செய்யுமற்புதமே.52 3828 அற்புதன் செம்மையிராமானுசன் * என்னையாளவந்த
கற்பகம் கற்றவர்காமுறுசீலன் * கருதிய
பற்பல்லுயிர்களும்பல்லுலகியாவும்பரனதென்னும்
நற்பொருள்தன்னை * இந்நானிலத்தேவந்துநாட்டினனே.53 3829 நாட்டிய நீசச்சமயங்கள்மாண்டன * நாரணனைக்
காட்டியவேதம் களிப்புற்றது * தென்குருகைவள்ளல்
வாட்டமிலாவண்தமிழ்மறைவாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டியசீலத்து * இராமானுசன்தனியல்வுகண்டே.54 3830 கண்டவர் சிந்தைகவரும் * கடிபொழில்தென்னரங்கன்
தொண்டர்குலாவு மிராமானுசனைத் * தொகையிறந்த
பண்தருவேதங்கள்பார்மேல்நிலவிடப்பார்த்தருளும்
கொண்டலைமேவித்தொழும் * குடியாம்எங்கள் கோக்குடியே.55 3831 கோக்குலமன்னரை மூவெழுகால் * ஒருகூர்மழுவால்
போக்கியதேவனைப் போற்றும்புனிதன் * புவனமெங்கும்
ஆக்கியகீர்த்தியிராமானுசனையடைந்தபின் என்
வாக்குஉரையாது * என்மனம்நினையாதுஇனி மற்றொன்றையே.56 3832 மற்றொருபேறுமதியாது * அரங்கன்மலரடிக்கு ஆள்
உற்றவரே தனக்குஉற்றவராக்கொள்ளும்உத்தமனை *
நல்தவர்போற்றுமிராமானுசனை இந்நானிலத்தே
பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன்ஒரு பேதைமையே.57 3833 பேதையர் வேதப்பொருளிதென்றுன்னிப் * பிரமம் நன்றென்று
ஓதிமற்றெல்லாவுயிருமஃதென்று * உயிர்கள்மெய்விட்டு
ஆதிப்பரனொடொன்றாமென்றுசொல்லுமவ்வல்லலெல்லாம்
வாதில்வென்றான் * எம்மிராமானுசன்மெய்ம்மதிக்கடலே.58 3834 கடலளவாய திசையெட்டினுள்ளும் * கலியிருளே
மிடைதருகாலத்து இராமானுசன் * மிக்கநான்மறையின்
சுடரொளியாலவ்விருளைத்துரந்திலனேல் உயிரை
யுடையவன் * நாரணனென்றறிவாரில்லையுற்றுணர்ந்தே.59 3835 உணர்ந்தமெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் * திருவாய்மொழியின்
மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் * மாமலராள்
புணர்ந்தபொன்மார்பன்பொருந்தும்பதிதொறும்புக்கு நிற்கும்
குணந்திகழ்கொண்டல் * இராமானுசன்எங்குலக் கொழுந்தே.60 3836 கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால் * நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்தாட்கொண்டபின்னும் * அருமுனிவர்
தொழுந்தவத்தோன்எம்இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்
கெழுந்தது * அத்தால்நல்லதிசயங்கண்டதிருநிலமே.61 3837 இருந்தேனிருவினைப் பாசம்கழற்றி * இன்றியானிறையும்
வருந்தேன்இனி எம்மிராமானுசன் * மன்னுமாமலர்த்தாள்
பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கொன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப்பரவும் * பெரியோர்தங்கழல்பிடித்தே.62 3838 பிடியைத்தொடரும் களிறென்ன * யான்உன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச்
செடியைத்தொடரும்மருள்செறிந்தோர்சிதைந்தோடவந்து இப்
படியைத்தொடரும் * இராமனுச! மிக்கபண்டிதனே!63 3839 பண்தருமாறன்பசுந்தமிழ் * ஆனந்தம்பாய்மதமாய்
விண்டிட எங்களிராமானுசமுனிவேழம் * மெய்ம்மை
கொண்டநல்வேதக்கொழுந்தண்டமேந்திக்குவலயத்தே
மண்டிவந்தேன்றது * வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே.64 3840 வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு * என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது தவம்தாரணிபெற்றது * தத்துவநூல்
கூழற்றதுகுற்றமெல்லாம்பதித்தகுணத்தினர்க்கு அந்
நாழற்றது * நம்மிராமானுசன்தந்தஞானத்திலே.65 3841 வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு * என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது தவம்தாரணிபெற்றது * தத்துவநூல்
கூழற்றதுகுற்றமெல்லாம்பதித்தருணத்தினர்க்கு அந்
நாழற்றது * நம்மிராமானுசன்தந்தஞானத்திலே.66 3842 சரணமடைந்த தருமனுக்கா * பண்டுநூற்றுவரை
மரணமடைவித்தமாயவன் * தன்னைவணங்கவைத்த
கரணமிவையுமக்கன்றென்றிராமானுசன் உயிர்கட்கு
அரணங்கமைத்திலனேல் * அரணார்மற்றிவ்வாருயிர்க்கே?67 3843 ஆரெனக்கின்று நிகர்சொல்லில்? * மாயனன்றைவர்தெய்வத்
தேரினில் செப்பியகீதையின் * செம்மைப்பொருள்தெரியப்
பாரினிற்சொன்னஇராமானுசனைப்பணியும்நல்லோர்
சீரினிற்சென்றுபணிந்தது * என்ஆவியும்சிந்தையுமே.68 3844 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன்னாள்
அந்தமுற்றாழ்ந்ததுகண்டு * அவைஎன்றனக்கன்றருளால்
தந்தவரங்கனும் தன் சரண்தந்திலன் தானதுதந்து *
எந்தை யிராமானுசன்வந்தெடுத்தனனின்றென்னையே.69 3845 என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து * எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதேநலம் * அன்றிஎன்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன்பெருங்கருணை
தன்னையென்பார்ப்பர்? * இராமானுச! உன்னைச் சார்ந்தவரே.70 3846 சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ் * அன்புதான் மிகவும்
கூர்ந்தது அத்தாமரைத்தாள்களுக்கு * உன்தன் குணங்களுக்கே
தீர்ந்ததுஎன்செய்கை முன்செய்வினை நீசெய்வினையதனால்
பேர்ந்தது * வண்மையிராமானுச! எம்பெருந்தகையே!71 3847 கைத்தனன் தீயசமயக்கலகரைக் * காசினிக்கே
உய்த்தனன் தூயமறைநெறிதன்னை * என்றுன்னியுள்ளம்
நெய்த்தவன்போடிருந்தேத்தும் நிறைபுகழோருடனே
வைத்தனன் என்னை * இராமானுசன் மிக்கவண்மை செய்தே.72 3848 வண்மையினாலும் தன்மாதகவாலும் * மதிபுரையும்
தண்மையினாலும் இத்தாரணியோர்கட்குத் * தான்சரணாய்
உண்மைநல்ஞானமுரைத்த இராமானுசனையுன்னும்
திண்மையல்லா லெனக்கில்லை * மற்றோர் நிலைதேர்ந்திடிலே.73 3849 தேரார் மறையின் திறமென்று * மாயவன் தீயவரைக்
கூராழிகொண்டு குறைப்பது * கொண்டலனையவண்மை
ஏரார்குணத்தெம்மிராமானுச னவ்வெழில்மறையில்
சேராதவரைச் சிதைப்பது * அப்போது ஒரு சிந்தை செய்தே.74 3850 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தமீனும் * திருவரங்கர்
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி * நங்கண்முகப்பே
மொய்த்தலைத் துன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக்கும்வந்து * இராமானுச! என்னை முற்றும் நின்றே.75 3851 நின்றவண்கீர்த்தியும் நீள்புனலும் * நிறைவேங்கடப் பொற்
குன்றமும் வைகுந்தநாடும் குலவியபாற்கடலும் *
உன்தனக்கெத்தனையின்பந்தரும் உன்னிணை மலர்த்தாள்
என்தனுக்கும் அது * இராமானுச! இவையீந்தருளே. (2)76 3852 ஈந்தனனீயாதவின்னருள் * எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப்பல்பொருளால் * இப்படியனைத்தும்
ஏய்ந்தனன்கீர்த்தியினா லென்வினைகளைவேர்பறியக்
காய்ந்தனன் * வண்மையிராமானுசற்குஎன்கருத்தினியே?77 3853 கருத்திற்புகுந்து உள்ளிற்கள்ளம்கழற்றிக் * கருதிய
வருத்தத்தினால் மிகவஞ்சித்து * நீயிந்தமண்ணகத்தே
திருத்தித்திருமகள்கேள்வனுக்காக்கியபின் என்னெஞ்சில்
பொருத்தப்படாது * எம்மிராமானுச! மற்றோர்பொய்ப்பொருளே.78 3854 பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து * இந்தப்பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன்நிற்க * வேறுநம்மை
உய்யக்கொள்ளவல்லதெய்வமிங்கியாதென்றுலர்ந்து அவமே
ஐயப்படாநிற்பர் * வையத்துள்ளோர்நல்லறிவிழந்தே.79 3855 நல்லார்பரவும் இராமானுசன் * திருநாமம்நம்ப
வல்லார்திறத்தை மறவாதவர்கள்யவர் * அவர்க்கே
எல்லாவிடத்திலுமென்றுமெப்போதிலுமெத்தொழும்பும்
சொல்லால்மனத்தால் * கருமத்தினால்செய்வன் சோர்வின்றியே.80 3856 சோர்வின்றி உன்தன்துணையடிக்கீழ் * தொண்டுபட்டவர்பால்
சார்வின்றிநின்றவெனக்கு * அரங்கன்செய்யதாளிணைகள்
பேர்வின்றியின்றுபெறுத்தும்இராமானுச! இனியுன்
சீரொன்றியகருணைக்கு * இல்லைமாறுதெரிவுறிலே.81 3857 தெரிவுற்றஞானம்செறியப்பெறாது * வெந்தீவினையால்
உருவற்றஞானத்து உழல்கின்ற வென்னை * ஒருபொழுதில்
பொருவற்றகேள்வியனாக்கிநின்றான்என்னபுண்ணியனோ?
தெரிவுற்றகீர்த்தி * இராமானுசனென்னுஞ்சீர்முகிலே.82 3858 சீர்கொண்டுபேரறம்செய்து * நல்வீடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மையர் கூட்டனல்லேன் * உன்பதயுகமாம்
ஏர்கொண்ட வீட்டையெளிதினிலெய்துவன் உன்னுடைய
கார்கொண்டவண்மை * இராமானுச! இதுகண்டுகொள்ளே.83 3859 கண்டுகொண்டேன் எம்மிராமானுசன்தன்னைக் * காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன்தொண்டர் பொற்றாளில் * என்தொல்லைவெந்நோய்
விண்டுகொண்டேன்அவன்சீர்வெள்ளவாரியைவாய் மடுத்து இன்று
உண்டுகொண்டேன் * இன்னமுற்றனவோதிலுலப்பில்லையே.84 3860 ஓதியவேதத்தினுட்பொருளாய் * அதனுச்சிமிக்க
சோதியைநாதனெனவறியாது உழல்கின்றதொண்டர் *
பேதமைதீர்த்தஇராமானுசனைத்தொழும்பெரியோர்
பாதமல்லால்என்தனாருயிர்க்கு * யாதென்றும் பற்றில்லையே.85 3861 பற்றாமனிசரைப்பற்றி * அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்று ஓடிநையேன்இனி * ஒள்ளிய நூல்
கற்றார்பரவும்இராமானுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார்யவர் * அவர்எம்மைநின்றாளும்பெரியவரே.86 3862 பெரியவர்பேசிலும்பேதையர்பேசிலும் * தங்குணங்கட்கு
உரியசொல் லென்றுமுடையவனென்றென்று * உணர்வில்மிக்கோர்
தெரியும்வண்கீர்த்தியிராமானுசன்மறைதேர்ந்துஉலகில்
புரியுநல்ஞானம் * பொருந்தாதவரைப்பொரும்கலியே.87 3863 கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல் * கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலையுண்டு தன்னுள்ளம்தடித்து * அதனால்
வலிமிக்கசீயமிராமானுசன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று * இப்புவனத்தில்வந்தமை போற்றுவனே.88 3864 போற்றருஞ்சீலத்திராமானுச! * நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல்அதுதாழ்வு * அதுதீரில்உன்சீர்தனக்குஓர்
ஏற்றமென்றேகொண்டிருக்கிலு மென்மனம்ஏத்தியன்றி
ஆற்றஇல்லாது * இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே.89 3865 நினையார் பிறவியை நீக்கும்பிரானை * இந்நீணிலத்தே
எனையாளவந்தவிராமானுசனை * இருங்கவிகள்
புனையார் புனையும்பெரியவர்தாள்களில் பூந்தொடையல்
வனையார் * பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே.90 3866 மருள்சுரந்தாகமவாதியர்கூறும் * அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த உலகிருள்நீங்க * தன்னீண்டியசீர்
அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதனரங்கனென்னும்
பொருள்சுரந்தான் * எம்மிராமானுசன் மிக்கபுண்ணியனே.91 3867 புண்ணியநோன்பு புரிந்துமிலேன் * அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள்வி நுவன்றுமிலேன் * செம்மைநூற் புலவர்க்கு
எண்ணருங்கீர்த்தியிராமானுச! இன்றுநீபுகுந்து என்
கண்ணுள்ளும்நெஞ்சுள்ளும் * நின்றவிக்காரணம் கட்டுரையே.92 3868 கட்டப்பொருளை மறைப்பொருளென்று * கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே? * என்பெருவினையைக்
கிட்டிக் கிழங்கொடுதன்னருளென்னுமொள்வாளுருவி
வெட்டிக்களைந்த * இராமானுசனென்னும் மெய்த்தவனே.93 3869 தவந்தரும் செல்வந்தகவும்தரும் * சலியாப்பிறவிப்
பவந்தரும்தீவினை பாற்றித்தரும் * பரந்தாமமென்னும்
திவந்தரும்தீதிலிராமானுசன்தன்னைச்சார்ந்தவர்கட்கு
உவந்தருந்தேன் * அவன்சீரன்றியானொன்றும் உள்மகிழ்ந்தே.94 3870 உண்ணின்றுஉயிர்களுக்குஉற்றனவேசெய்து * அவர்க்கு உயவே
பண்ணும்பரனும் பரிவிலனாம்படி * பல்லுயிர்க்கும்
விண்ணிந்தலைநின்றுவீடளிப்பான்எம்மிராமானுசன்
மண்ணின்தலத்துதித்து * மறைநாலும்வளர்த்தனனே.95 3871 வளரும்பிணிகொண்ட வல்வினையால் * மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது * முடைத்தலையூன்
தளருமளவுந்தரித்தும்விழுந்தும்தனிதிரிவேற்கு
உளரெமிறைவர் * இராமானுசன்தன்னைஉற்றவரே.96 3872 தன்னையுற்றாட்செய்யும்தன்மையினோர் * மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய என்னையுற்றானின்று * தன்தகவால்
தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லையென்றறிந்து
தன்னையுற்றாரை * இராமானுசன்குணம்சாற்றிடுமே.97 3873 இடுமே? இனியசுவர்க்கத்தில் * இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே? அவற்றைத்தொடர்தருதொல்லை * சுழல்பிறப்பில்
நடுமே? இனிநம்மிராமானுசன் நம்மைநம்வசத்தே
விடுமே? சரணமென்றால் * மனமே! நையல்மேவுதற்கே. (2)98 3874 தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் * தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் * நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீள்நிலத்தே
பொற்கற்பகம் * எம்மிராமானுசமுனிபோந்தபின்னே.99 3875 போந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு * உனதடிப்போதில் ஒண்சீ
ராந்தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி * நின்பாலதுவே
ஈந்திடவேண்டும் இராமானுச! இதுவன்றியொன்றும்
மாந்தகில்லாது * இனிமற்றொன்று காட்டிமயக்கிடலே.100 3876 மயக்குமிருவினை வல்லியிற்பூண்டு * மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றியவென்னை * துயரகற்றி
உயக்கொண்டுநல்கும் இராமானுச! என்றதுஉன்னையுன்னி
நயக்குமவர்க்கிதிழுக்கென்பர் * நல்லவரென்றுநைந்தே.101 3877 நையும்மனம் உன்குணங்களையுன்னி * என்நாவிருந்துஎம்
ஐயனிராமானுச னென்றழைக்கும் * அருவினையேன்
கையுந்தொழும் கண்கருதிடும் காணக் கடல்புடைசூழ்
வையமிதனில் * உன்வண்மை என்பாலென் வளர்ந்ததுவே?102 3878 வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய் * அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன்னாகங் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடுஞ்சிந்தையிராமானுசன் என்தன்மெய்வினைநோய்
களைந்து நன்ஞானமளித்தனன் * கையிற்கனியென்னவே.103 3879 கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் * உன்தன்
மெய்யிற் பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான் * நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் * இராமானுச! என்செழுங் கொண்டலே!104 3880 செழுந்திரைப்பாற்கடல் கண்டுயில்மாயன் * திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில் மேவுநன்ஞானி * நல்வேதியர்கள்
தொழுந்திருப்பாத னிராமானுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத்தாடுமிடம் * அடியேனுக்கு இருப்பிடமே. (2)105 3881 இருப்பிடம் வைகுந்தம்வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் * அவை தம்மொடும்வந்து
இருப்பிடம்மாயன் இராமானுசன்மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் * என்தனிதயத்துள்ளேதனக்கின்புறவே. (2)106 3882 இன்புற்றசீலத்திராமானுச! * என்றுமெவ்விடத்தும்
என்புற்றநோயுடல்தோறும் பிறந்திருந்து * எண்ணரிய
துன்புற்றுவீயினும்சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே
அன்புற்றிருக்கும்படி * என்னையாக்கியங்காட்படுத்தே. (2)107 3883 அங்கயல்பாய்வயல்தென்னரங்கன் * அணியாகமன்னும்
பங்கயமாமலர்ப்பாவையைப் போற்றுதும் * பத்தியெல்லாம்
தங்கியதென்னத்தழைத்துநெஞ்சே! நம்தலைமிசையே
பொங்கியகீர்த்தி * இராமானுசனடிப்பூ மன்னவே. (2)108 3884