Naalaayira Divya Prabhandham – Pasuram (97-107)
Naalaayira Divya Prabhandham – Pasuram (97-107)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் | ||
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி * தன்னியலோசை சலன்சலனென்றிட * மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் * என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. (2) |
1 | 97 |
செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் * பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப * சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய * அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. |
2 | 98 |
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து * நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு * அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த * அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ. |
3 | 99 |
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன * தேறிஅவளும் திருவுடம்பில்பூச * ஊறியகூனினை உள்ளேயொடுங்க * அன்று ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. |
4 | 100 |
கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி * எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் * சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை * அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ. |
5 | 101 |
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் * தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய் * காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே! * ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ. |
6 | 102 |
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் * தக்கதிதன்றென்று தானம்விலக்கிய * சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய * சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. |
7 | 103 |
என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன் * முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன * மன்னுநமுசியை வானில்சுழற்றிய * மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ. |
8 | 104 |
கண்டகடலும் மலையும்உலகேழும் * முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ! என்று * இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள * மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ. |
9 | 105 |
துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட * மன்னியநான்மறை முற்றும்மறைந்திட * பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க * அன்று அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ. |
10 | 106 |
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன் தன்னை * அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன * மச்சணிமாடப் புதுவைக்கோன்பட்டன்சொல் * நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) |
11 | 107 |
Total Page Visits: 1607 - Today Page Visits: 1