Naalaayira Divya Prabhandham – Pasuram (75-85)
Naalaayira Divya Prabhandham
நாலாயிர திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் | ||
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் * ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி * பேணிப்பவளவாய் முத்திலங்க * பண்டு காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2) |
1 | 75 |
பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி * தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட * என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் * மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி. |
2 | 76 |
பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன * என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல் * நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் * அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி. |
3 | 77 |
தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட * வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று * நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம் * கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி. |
4 | 78 |
புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து * அட்டியமுக்கி அகம்புக்கறியாமே * சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் * பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி பற்பநாபா! கொட்டாய்சப்பாணி. |
5 | 79 |
தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது * போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள * பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு * அன்று தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி. |
6 | 80 |
பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை * இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத * கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க * சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே! சப்பாணி. |
7 | 81 |
குரக்கினத்தாலே குரைகடல்தன்னை * நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை * அரக்கர்அவிய அடுகணையாலே * நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே! சப்பாணி. |
8 | 82 |
அளந்திட்டதூணை அவன்தட்ட * ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் * உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் * பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி. |
9 | 83 |
அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை * மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி * வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக * கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே! சப்பாணி. |
10 | 84 |
ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை * நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் * வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் * வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) |
11 | 85 |
Total Page Visits: 343 - Today Page Visits: 1